Labels

Saturday, 17 March 2018

தேநீர்த்துளிகள்

சார் நீங்க டீடோட்லரா? (Teetotlar)

இல்லை .நான் டீட்டோலர்(Tea-totlar).

ஆம்.  தேநீர்  தான் என்னை முழுவதுமாக ஆட்கொண்டுள்ளது.

 சராசரியாக நம் உடம்பில் 4.5 முதல் 5.5 லிட்டர் இரத்தம் இருக்குமாம். ஆனால் , என்னோட உடம்பில் 3  லிட்டர் தான் இருக்கும்னு நினைக்கிறேன். மீதம் முழுவதும்  தேநீர் தான் இருக்கும்.

இன்றைக்கு இருக்கிற Bachelor ல் பாதி  பேருக்கு தேநீர் தான் முதல் காதலி .அதனுடன் செலவிடும் நேரமே அவர்களுக்கு அதிகம்.
இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால் , தேநீரினால் செலவு பத்து ரூபாய் தான் , ஆனால் காதலியால் ????


தேநீருடனான என் வாழ்வில் சில நினைவுகள் !-


காலையில் எழுந்ததும் தேநீர் அருந்துவது என்ன சுகம் .. அதுவும் பல் துலக்காமல் அருந்தினால் , அடடே என்ன ஒரு ஆனந்தம் .

மழை பொழிகின்ற பொழுது கையில் ஒரு தேநீர் குவளையோடு அமர்ந்து மழையை ரசித்திராதவர் இருக்க வாய்ப்பில்லை.
வாழைக்காய் அல்லது  மிளகாய் பஜ்ஜி இருந்தால் இன்னும் பிரமாதம்.

கல்லூரி காலங்களில் ,இரவு பன்னிரண்டு மணிக்கு பொழுது
போகவில்லையெனில்  கிளம்பி  இரண்டு கிலோமீட்டர் நடந்து சரவணம்பட்டியில் உள்ள ஜோதி பேக்கரியில் குடித்துவிட்டு
திரும்புவோம். அந்த நாட்களை மறக்க முடியுமா .?? நன்றி கிஷோர் அண்ணா !!

அதுத்தது IT வாழ்க்கை ஆரம்பித்தது. எங்க வீட்டுக்கு வருபவர்களில் பாதி பேர் கேட்கக்கூடிய ஒரே கேள்வி , தம்பி நிறைய சம்பளம் வாங்குற வேலையில் இருக்கிறாயே எப்போ கல்யாணம் ? IT கம்பெனியில வேலை செய்கிறவர்களை விட அந்த கம்பெனி வெளியில் தேநீர் விற்பவர் அதிகம் சம்பாதிக்கிறார் என்று தெரியாத மக்கள் ... சொல்றதுக்கு எதுவும் இல்ல .

அலுவலக விடுமுறை நாட்களில் மாலை இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்னை புறவழிச்சாலையில் 
பஜ்ஜியுடன் தேநீர் அருந்திய நாட்களை மறக்க முடியுமா பாலாஜி , குரு , அபிஷேக் , மோகன் ???? அலுவலகத்துக்கு நாம் வாகனத்தை ஒட்டிய தொலைவை விட தேநீர் கடைக்குச்செல்ல ஒட்டியதே அதிகம். இதை தினமும் முகநூலில் பதிவு செய்து வேறு வைத்திருக்கிறோம் ஹாஷ்டாக்க்குகளோடு #TN72 #TN38

ஒரு ஆறு மாதங்கள் பணிச்சுமை மிக அதிகம். மூச்சு விடுவதற்கு கூட நேரம் இருக்காது .. அப்படி சென்று கொண்டிருந்த நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு வெளியில் வந்து ஒரு தேநீர் குடித்து மீண்டும் கணினி முன் அமர்வோம் . மீண்டும் இரவு பதினோரு மணியளவில் ஒரு குலவை தேநீர் . இந்த வேலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் எனக்கு மனஅழுத்தம் வந்ததேயில்லை . காரணம் இந்த தேநீர் அல்ல . தேநீர் அருந்த உடன் வந்த நண்பர்கள் தான்.  தினேஷ் பவுண்சர், பிரதாப் , துரை , ஷங்கர் ஜி, சாய் , அருண் . 🙋


அலுவலகத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நான் எனக்கு தேநீரில் mixture போட்டு குடிப்பது பிடிக்குமென்று சொன்னேன். யாருக்குமே புரியல . தேநீரில் mixture a ??
எங்கள் ஊரில் பால் இல்லாமல் தான் காப்பி போடுவார்கள் . அதற்கு கடுங்காப்பி என்று பேர் . அதில் முறுக்கு இல்லனா Mixture போட்டு தான் குடிப்போம்.

இதுவரை நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்கவில்லை என்றால் செய்து பாருங்களேன். கடுங்காப்பி - முறுக்கு இவையிரண்டும் இரட்டைக்கிளவி போன்று .


தேநீர் உடலுக்கு நல்லதா கெட்டதா ? இதை நான் ஆராய விரும்பவில்லை . தேநீர் என் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தியிருந்தாம்கூட உள்ளத்திற்கு புத்துணர்வையும் , வாழ்க்கைக்கு நிறைய கருத்துக்களை தந்துள்ளது .  கல்லூரியில் நான் கற்று கொண்டதை விட என் நண்பர்கள் கற்று கொடுத்ததே அதிகம் ...


தேநீர் என் உடலில் பாதி அளவு கலந்திருக்கலாம் .  ஆனால் உயிரிலே கலந்தது நண்பர்கள் தான் .

இத்துணை நல்லது செய்த தேநீருக்கு என் நன்றிகள் !!!



No comments:

Post a Comment