Labels

Friday, 9 March 2018

உலக மகளிர் தினம் 2018 !!!

உலக மகளிர் தினம் வழக்கம் போல்  மார்ச்,8 அன்று கொண்டாடப்பட்டது.

வழக்கம் போல எல்லா கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்... மேடை பேச்சுக்களில் , பொது கூட்டங்களில் அவர்களை வாழ்த்தினார்கள், அடடே !!!

நிறைய பேர் வீட்டிலும் அலுவலகத்திலும் அணிச்சல்(cake) வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

தன்னுடைய அம்மா, தங்கை, மனைவி, தோழி என தங்களை சுற்றி உள்ள அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் ..சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் .. வாட்ஸாப்ப் செயலியில் நிலையை(status) முழுவதும் மகளிர் தின தகவல்கள் தாம் ,

சரி .வாழ்த்துக்கள் தெரிவிப்பதால் மட்டும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்று சொல்ல முடியுமா ???

மகளிர் தினம் என்று ஒன்று கொண்டாடுவதே தவறு .. மகளிர் தினம் தினம் கொண்டாடப்படவேண்டியவர்கள்..

வளைந்து கொடுக்கும் தன்மை இருப்பதால் தான் நதிகளுக்கே கங்கை , கோதாவரி என பெண்களின் பெயர்களில் அழைக்கிறோம்...

எதையும் பொறுத்துக்கொள்பவள் பெண் என்பதாலோ என்னவோ அவளுக்கு எதிராக இத்தனை கொடுமைகள் நடக்கின்றன இந்நாட்டில் .

நிர்பயா,ஸ்வாதி, ஹாசினி , தொடங்கி இன்று கல்லூரி வாசலில் கொலை செய்யப்பட்ட kk நகர் அஷ்வினி வரை , இன்னும்  எத்தனையோ குற்றங்கள் .....

இதற்கு ஒரு முடிவு  வரட்டும். பின்னர் பட்டாசு வெடித்தே கொண்டாடுவோம் மகளிர் தினத்தை . 

பெண்ணியம் மதிப்போம் ...





No comments:

Post a Comment