Labels

Monday, 12 March 2018

கிராமத்தில் ஒரு நாள்

எப்பவுமே பரபரப்புடன் இருக்கிற சிட்டி லைப்ல- இருந்து பழகிவிட்ட எனக்கு, கிராமத்தில் பொழுதை கழித்த ஒரு நாள் எனக்கு அளித்த அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த போஸ்ட்   ...

திருநெல்வேலி யில் நாங்குநேரி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் அது (பெயர் சொல்ல வேணாம் னு நினைக்கிறேன்) .
அம்மாவின் அலுவலக பணிக்காக உடன் செல்லவேண்டிருந்தது ,காரணம் அந்த ஊருக்குள் செல்ல பேருந்து வசதி இல்லை. பேருந்தில் சென்றால் ஊரின் விளக்கில் இறக்கி விட்டுவிடுவார்கள் போல. அங்கிருந்து ஊருக்குள் நடந்து தான் செல்ல வேண்டுமாம். இந்த வெயிலில் நடந்து செல்வது சிரமம் என்பதால் நான் கார- ல அழைத்துச்சென்றேன் .

காலை 10 மணியளவில் அந்த ஊரின் எண்ட்ரன்ஸ்கு- வந்தடைந்தோம் .
பேருந்து நிறுத்தத்தை தாண்டி ஊருக்குள் செல்வதற்கு சரியான ரோடு கூட இல்ல .. குண்டும் குழியுமாக இருந்த அந்த ரோடு-ஐ சிரமப்பட்டு  கடந்து ஊருக்குள்  சென்றது எங்களோட கார் . அங்குள்ள ஒரு அங்கன்வாடியில் தான் அன்றைய கேம்ப். தடுப்பூசி போடணும் அது தான் அன்றைய பணி. என்னோட அம்மா உள்ளே சென்றார்கள் . நான் காரை ஒரு வேப்பமரத்தடியில் நிறுத்திவிட்டு கார்லயே காத்திருந்தேன் .

வேப்பமரத்தடி நிழல் காற்று தரும் குளிர்ச்சியை எந்த AC காற்றும் தருவதில்லை .. உண்மை..

சரி போய் ஜூஸ் ஏதாவது குடிச்சிட்டு வரலாம் னு கிளம்பினேன்.இளநீர் எங்கயாவது கிடைக்குமா னு பாத்தேன் கிடைக்கவே இல்ல.அந்த கிராமத்தில் கண்ணுக்கு தென்பட்டது ஒரே ஒரு பெட்டிக்கடை தான். அங்க விசாரித்தேன் , 25 ரூபாய் கொடுத்து யாரும் இளநீர் இங்க வாங்க மாட்டாங்கன்னு சொன்னார்  .அதனால இங்க விலையிறதெல்லாம் சிட்டி-ல இருக்கிற கடைகளுக்கு கொடுத்திறாங்க .என்னடா இது 25 ரூபா குடுத்து இளநீர் வாங்கமாற்றங்க இந்த ஊர் மக்கள் . ஆனா நம்ம 45 /50 ரூபா குடுத்து வாங்கிறோமே !.

கிராமத்துல இருந்தா தெரிஞ்சவங்க வீட்ல இருந்தே எல்லாம் வந்திரும் போல. நாம தான் சூப்பர் மார்க்கெட்-ல தண்டமா பணத்தை செலவு பண்ணறோம்.

சரி.. திரும்பி அந்த மரத்தடிக்கே சென்றேன். ரொம்ப போர் அடிச்சதால மொபைல்ல- எடுத்தேன் .. எல்லா அப்ப்ளிகேஷனையும் ஓப்பன் பண்ணிட்டு இருந்தேன்.  மொபைல் லால் ஒரு மணிநேரம் கழிந்தது .

ரொம்ப போர் அடிச்சுது.. சரி , அந்த அங்கன்வாடிக்குள்ள போனேன் . ஒரு சூரியகாந்தி தோட்டத்துக்குள்ள நுழைந்த மாதிரி இருந்துச்சு .. மொத்தமா 10 பூக்கள் ! ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு !!!!

அப்படியே ஒரு ஓரமாக அமர்ந்து அந்த குழந்தைகளை பாத்துட்டு இருந்தேன் . அந்த குழந்தைகளை பார்க்கும் போது நிறைய எண்ணங்கள் என்னுள் தோன்றின . . கணினிகளோடே கழிந்த என்னோட நாட்கள் கொடுத்த அத்துணை டென்ஷன்களும் ஒரு நொடியில் மறைந்தன.  ஒரு குழந்தையின் சிரிப்பிற்கு அத்துணை வலிமையுண்டோ !! ஆம் !!!.

அரசு பள்ளிகள் என்றாலே மட்டமா தான் இருக்கும்னு- யார் சொன்னது ?அதுக்கு நேர்மாறா இருந்தது அந்த பள்ளி.அந்த ஸ்கூல் ஒரு Building தான் ..  நல்லா சுத்தமா வச்சுருந்தாங்க . ஆங்காங்கே வரைபடங்கள் இருந்தன .

மதியஉணவு திட்டம் எதுக்கு கொண்டுவந்தாங்க-னு எனக்கு அன்னைக்கு தான் புரிஞ்சுது .. சரியா 12 மணியளவில் எல்லா குழந்தைகளையும் சாப்பிட உக்காரசொன்னாங்க . எல்லா குழந்தைங்க முகத்துலயும் பசி தெரிஞ்சுது .  எல்லா குழந்தைகளும் வரிசையாய் அமர்தன. காய்கறி  கலவை சாதம் போட்டு எல்லார்க்கும் கொடுத்தாங்க .  எல்லாருமே தானாக எடுத்து சாப்பிட தொடங்கினர் . 2 1/2 வயசு  தானே இருக்கும் அத்தனை பேருக்கும். யாருமே ஊட்டி விடாம தானா சாப்பிடறாங்களே .. தானாக சாப்பிட்டு முடிச்சு தட்டுகளை எடுத்து வைத்தனர். டைனிங் manners லாம் அந்த குழந்தைகள் கிட்ட கத்துக்கணும் போல. !

நம்ம ஊர் ளையும் Playschools இருக்கு அங்க எவ்ளோ பீஸ் வாங்கிறாங்க , என்ன சொல்லித்தந்திர போறாங்க .?? ஏதும் இல்ல .
வெறும் ABCD மற்றும் 1234 தானே .. இந்த அங்கன்வாடியிலும் அதை தான் சொல்லி தராங்க. எதுக்கு Playschool-ல பணத்தை செலவு பண்ணனும். அரசு அங்கன்வாடியியே சேர்க்கலாமே?
அதுஎப்படி இவ்ளோ சம்பளம் வாங்குற நான் எதுக்கு அரசு பள்ளியில் சேர்க்கணும் . என்னோட ஸ்டேட்டஸ் என்ன ஆகிறது னு  கேக்கற மக்களுக்கு பதில்சொல்லும் விதமாக  இருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் . தன்னோட இரண்டரை vayathu மகள் ரித்திஷாவை விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் ப்ரி.கே.ஜி சேர்த்துள்ளார். பள்ளியில் சேர்ந்தது மட்டும் அல்லாமல் தினமும் மகளை அழைத்து வந்து விடுவதையும் தொடர்ந்து செய்துவருகிறார். சூப்பர் சார் நீங்க !!!

ஓடி ஆடி விளையாடறது தான குழந்தை பருவம் . அதை விட்டுட்டு விளையாடாத , வீட்டுக்குள்ள உக்காரு Playstation-ல விளையாடு , மொபைல- ல கேம் விளையாடு னு நாம்ம அவங்கள வீட்டுக்குள்ளேயே அடைக்காமல்  இருப்போம். சிறகடித்து பறக்கட்டும் குழந்தைகள் ,,,

-நன்றி.







No comments:

Post a Comment